Pages

Wednesday, 13 July 2011

ஒரு பிரிட்டீஷ்காரரின் வாக்குமூலத்தை பாருங்கள்-1835

1835-ல் பாரதபூமியை சுற்றி பார்த்த ஒரு பிரிட்டீஷ்காரரின் வாக்குமூலத்தை பாருங்கள்.

இந்த நிலை கிபி 1500 வரை நீடித்தது.

அப்புறம் வந்த எந்திர தொழில்புரட்சி மேற்கை பருமனாக்கியது என்கின்றார்கள்.

நிறைய பேர் இந்தியாவின் ஐஸ்வர்யங்கள் என்றால் கொள்ளை போன கோஹினூர், தார்யா-இ-நூர் மற்றும் நூர்-ல்-ஐன் போன்ற வைரங்களும் மயிலாசனமும் அதைப்போன்ற மற்ற விலைமதிக்க முடியாது என்று கருதப்பட்டு உண்மையில் விலை குறிக்கப்பட்ட அற்ப பொருட்கள்தான். இதற்கு முன்பு நானும் உங்களைப்போல் தான கருதினேன்.


ஆனால் இந்தியதேசத்தின் உண்மையான விலை மதிப்பற்ற ஐஸ்வர்யங்கள் எவையன்றால் இந்த தேசத்தின் ஆன்மீக பலமும், அதன் வழியில் உழைக்க தயாராக இருக்கும் இளைய கூட்டத்தின் தன்னம்பிக்கை தான். சிறிய உதாரணம் - உங்களைப்போல் , என்னைப்போல் மற்றும் ITZ-ல் இருந்த உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் இந்திய இளைய கூட்டம்தான். என்ன வியப்பாக உள்ளதா? அது தான் உண்மையுங்கூட.


மேதகு அப்துல் கலாம் அவர்கள் தனது நூலில் திப்பு சுல்தானின் ஏவுகணைகளை பற்றி விவரித்து இருப்பார். அதில் ஒரு NRI இந்தியர் மேலை நாடுகள் தான் இத்தொழில் நுட்பத்தில் சிறந்தவை எனக்கருத்து கொண்டிருப்பார். அவரிடம் இந்த தொழில் நுட்பத்தை இந்தியாவிலிருந்து தான் இங்கு கொண்டு வந்து அதனை உபயோகப்படுத்தியதை நிருபித்த உடன் அந்த NRI 'ஙே' என்று விழிப்பார். அவரைக் கூறி குற்றமில்லை. அவர் படித்த மெக்காலேயின் கல்வி அப்படியாக்கிவிட்டது. நல்லவேளை நான் ஒரு PHD தான். அதாவது Passed Higher-secondary with Difficulty. நல்ல பாருங்க எல்லாமே CAPS தான். அதுசரி நீங்களும் என்னை போல ஒரு PHD தானா?


அதனால் தான் நாங்கள் அப்துல் கலாம் அவர்களை செல்லமாக 'இரண்டாம் ஜம்பாவானந்தா ' என்றழைப்போம். ஏனெனில் முதல் ஜம்பாவானந்தா அனுமன் தன் சுய திறமைகளை மறந்து அந்த NRI போல இருந்த போது அனுமனின் கடந்த காலத்தை நினைவுட்டி வங்காள விரிகுடாவை தாண்ட வைத்தார். இந்திய இளைஞர்களில் பெரும்பான்மையினர் தங்களது சுயவரலாற்றை மறந்து அனுமன் போல வாழ்கிறார்கள். அவர்களுக்கு மேற்கூறிய வகையில் சிகிச்சை அளித்தால் இந்தியா மறுபடியும் கிபி 0001-ல் இருந்த்து போல் சிறப்பான தேசமாகிவிடும்.

No comments:

Post a Comment