Pages

Wednesday, 13 July 2011

கி.பி. 1526 – 1600 வரை-முகலாயர் ஆட்சி


இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வியாபாரத்திற்காக வந்த வேளையில், இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். இந்தியாவில் முகலாயர்களின் வருகைக்கு முன்னரே அரபிகள் கேரளக் கடற்கரையோரமாக மிகச் சிறந்த வியாபாரத் தொடர்புகளை இந்தியாவுடன் வைத்திருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த அரபு வியாபாரிகளின் பரம்பரையில் வந்தவர்கள், பின்னர் ஆங்கிலேய மேலாதிக்கமும் அட்டூழியமும் மிகைத்த காலத்தில் கேரளக் கரையோரம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிகப்பெரும் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டனர்.
முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றினார்கள். ஆகவே முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்திலிருந்து சில வரலாற்றுக் குறிப்புகளை இப்போது பார்ப்போம்:
கி.பி. 1526 – 1530 வரை இதியாவில் பாபரின் ஆட்சி நடைபெற்றது.
கி.பி. 1530ல் பாபரின் மகன் ஹுமாயூனின் ஆட்சி ஆரம்பம்.
கி.பி. 1539ல் ஹுமாயூனை ஷெர்ஷாஹ் வென்று தில்லியைக் கைப்பற்றினார்.
கி.பி. 1555ல் மீண்டும் ஹுமாயூன் அரியணை ஏறினார்.
கி.பி. 1556ல் ஹுமாயூன் இறந்தபின் அவரின் மகன் அக்பர் மன்னரானார்.
கி.பி. 1565ல் தலக்கோட்டை யுத்தத்தில் விஜயநகரப் பேரரசு வீழ்ந்தது.
கி.பி. 1565 – 1597ல் அக்பரின் படைகள் இந்தியாவின் முக்கியப் பல நகரங்களைக் கைப்பற்றியது.
இந்தியாவின் மிகச் சிறந்த முகலாய மன்னர் என வரலாற்றில் தவறாக எழுதி வைக்கப்பட்டுள்ள அக்பரின் ஆட்சி காலத்தில்தான் முதன் முதலாக ஆங்கிலேய வியாபாரிகளுக்கு இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
கி.பி. 1579ல் தாமஸ் ஸ்டீபன்ஸ் என்ற ஆங்கிலேய கிறிஸ்தவப் பாதிரி தமிழகம் வந்தபோது, வளம் கொழிக்கும் இப்பூமியைப்பற்றித் தம் தந்தைக்குப் பல கடிதங்கள் எழுதினார். அவர் எழுதிய கடிதங்கள்தாம் இந்நாட்டிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே வர்த்தகத் தொடர்புக்கு வழிகோலின.
கி.பி. 1599 செப்டம்பர் 24ல் லண்டன் வியாபாரிகள் ஒன்றிணைந்து, இந்தியாவில் நேரடியாக வியாபாரம் செய்வதற்காக லண்டன் பவுண்டர்ஸ் ஹால் என்ற இடத்தில் ‘லார்ட் மையூர்’ என்பவரின் தலைமையில் லண்டன் வியாபாரிகள் சங்கம் ஒன்று உருவாக்கினர்.
கி.பி. 1600 செப்டம்பரில் இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்த எலிசபெத் ராணி கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்க அனுமதி வழங்கினார்.

No comments:

Post a Comment